2026 ஜூன் 2 அன்று குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறுகிறார். ரிஷப ராசி இல் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி தரும் விரிவான பலன்கள் கீழே காணலாம்.
2026 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியானது ரிஷப ராசியினருக்கு நன்மைகளும் தீமைகளும் கலந்த கலவையான பலன்களை வழங்கவிருக்கிறது. இதுவரை ரிஷப ராசிக்கு இரண்டாம் வீடான மிதுன ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான், ஜூன் 2, 2026 அன்று மூன்றாம் வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடக ராசியில் குரு பகவான் "உச்ச நிலை" பெறுகிறார். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கு குரு பகவான் ஜென்ம பகைவர் என்பதாலும், இந்த ராசிக்கு அவர் அஷ்டமாதிபதி (8-ஆம் வீட்டு அதிபதி) ஆவதாலும், சில முக்கிய எச்சரிக்கைகளையும் அதே சமயம் சில அற்புதமான நன்மைகளையும் இந்த பெயர்ச்சி கொண்டுவருகிறது.
கடக ராசியில் குரு பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பார்.
அக்டோபர் 31, 2026 முதல்:அதிசார கதியில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ஜனவரி 25, 2027:வக்ர நிலையில் மீண்டும் கடக ராசிக்கு திரும்புவார்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் முக்கியமாக 2026 ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள காலகட்டத்திற்குப் பொருந்தும். ஏனெனில், அக்டோபர் 31-க்கு பிறகு குரு பகவான் அதிசார கதியில் சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
ரிஷப ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் கரியர் அல்லது உத்தியோக வாழ்க்கையில் பெரிய அளவிலான அசுர வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது; முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கும். நீங்கள் எவ்வளவு கடின உழைப்பைப் போட்டாலும் அதற்கான அங்கீகாரமும் (Recognition) பாராட்டுகளும் தாமதமாகவே வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடமும் அல்லது மேலதிகாரிகளிடமும் தகவல் தொடர்பு குறைபாடுகள் (Miscommunication) ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லும் விஷயம் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம், எனவே பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.
தற்போதைய வேலையில் அதிக பணிச்சுமை அல்லது ஸ்ட்ரெஸ் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவசரப்பட்டு வேறு வேலைக்கு மாற வேண்டாம். அவ்வாறு மாறினால், அதைவிட அதிக மன அழுத்தம் நிறைந்த சூழலில் சிக்கிக்கொள்ள நேரிடும். 2026 அக்டோபர் வரை ஓவர் கான்ஃபிடன்ஸ் (Overconfidence) இல்லாமல், பொறுமையையும் விடாமுயற்சியையும் கடைப்பிடிப்பது நல்லது.
பணவரவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு சீரற்ற நிலை நீடிக்கும். குறிப்பாக தொழில் செய்பவர்களுக்கு ஒரு நாள் அதிக லாபமும், மறுநாள் மிகக் குறைவான வருமானமும் வந்து மனதை அலைபாய வைக்கும். உங்கள் வாடிக்கையாளர்களிடம் சரியான முறையில் தகவல்களைக் கொண்டு சேர்க்கவில்லை என்றால் (Lack of Communication) அதன் மூலம் பண விரயங்கள் ஏற்படலாம். திட்டமிடாத திடீர் பயணங்களால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட கூடுதல் செலவுகள் ஏற்படும்.
மூன்றாம் இடத்து உச்ச குரு தனது ஒன்பதாம் பார்வையால் 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால், உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவ்வளவு காலம் உங்களை வாட்டி வதைத்த மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்கி, நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் எனர்ஜெட்டிக்காகவும் மாறுவீர்கள். உடற்பயிற்சி, யோகா மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளில் திடீர் ஆர்வம் உண்டாகும். நாள்பட்ட சிறிய உடல்நலப் பிரச்சினைகள் படிப்படியாக அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாகக் குணமடையும்.
குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உடன்பிறந்தவர்களுடன் பாசம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத நல் ஆதரவு அவர்களிடமிருந்து கிடைக்கும்; அதே சமயம் அவர்களது தேவைகளுக்கு நீங்களும் முன்னின்று உதவுவீர்கள்.
சிங்கிளாக இருக்கும் ரிஷப ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் காதல் கைகூட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காதல் துணையானது நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலிருந்தோ அல்லது உங்களது தினசரி பயணங்களின் போதோ அறிமுகமாகலாம்.